Search This Blog

Monday, July 20, 2020

'5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்'.. 'உங்களுக்கான தமிழக அரசு வேலைவாய்ப்புகள்'.. 'உடனே அப்ளை பண்ணுங்க'

3 comments

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருவாடானை வட்டம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம்: வட்டாச்சியர் அலுவலகம்

மேலாண்மை: தமிழக அரசு

பணி : கிராம உதவியாளர் ( village assistant)

பணி இடங்கள்: இராமநாதபுரம், திருவாடானை

மொத்த காலிப்பணியிடங்கள் : 31

கல்வி தகுதி :

5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை

வயது வரம்பு:

21 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://ramanathapuram.nic.in/ என்ற அதிகாரபூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

3 comments: