அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை கடந்த 3 மாதங்களாக அரசு இலவசமாக கொடுத்து வருகிறது.
இந்நிலையில் அனைத்து அரிசி அட்டைத்தாரர்களுக்கும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை அடுத்த மாதம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment