Wednesday, August 12, 2020

நல்லாசிரியர் விருதுக்கு நேர்காணல்

மதுரையில் இந்தாண்டு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த 43 ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் நேர்காணல் நடந்தது.தொடக்க கல்வி 23, உயர் மேல்நிலையில் 16, மெட்ரிக் 3, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டயட்) சார்பில் 1 என விண்ணப்பித்தவர்கள் சி.இ.ஓ., அலுவலகத்தில் பங்கேற்றனர்.

சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் டி.இ.ஓ.,க்கள் முத்தையா, இந்திராணி, வளர்மதி, பராசக்தி, டயட் முதல்வர் செல்வி, பி.இ.ஓ., கென்னடி, தலைமையாசிரியர் குருநாதன் குழு நேர்காணல் நடத்தியது. ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், சமூக பங்களிப்பு, பள்ளி, மாணவர் நலனுக்கான நடவடிக்கைகள், விருதுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

No comments:

Post a Comment