JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. நேற்று முன்தினம் மத்திய அரசு 4-ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது.
மேலும், ஊரடங்கு செப்டம்பர்-30-ம் தேதி வரை தொடரும் எனவும், அதுவரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில், கேரளாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் பள்ளிகளைத் திறக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இந்த வருடத்தில் இனி பள்ளிகளைத் திறக்க முடியுமா..? என்பது சந்தேகம், ஆனால், அடுத்த ஜனவரியில் பள்ளிகளைத் திறக்க முடியும் என அவர் கூறினார்.
No comments:
Post a Comment