ஜூன் மாதம் முதல், பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கான முன்பதிவு நடந்தது. தற்போது, மாணவர் சேர்க்கை நடக்கிறது.பயிற்சி காணொளி மூலம் வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, அதற்கான அங்கீகாரமும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
காணொளி மூலம் நடக்கும் இந்த வகுப்பில் மாணவர்கள், 'ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்' (செயற்கை நுண்ணறிவு) குறித்த தங்களின் புதிய யோசனைகளை தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதில், மாநில வாரியாக, சிறப்பாக உள்ள முதல் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர்.
அடுத்தகட்ட பயிற்சியில் தேசிய அளவில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறந்த படைப்பாளிகளாக பாராட்டுப்படுவர். இதில் http://responsibleaiforyouth.negd.in/ என்ற இணையதளத்தில், சென்று பதிவுகளை மேற்கொள்ளலாம்.
பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செய்வதற்கு, ஆக.,15ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி குறித்த கூடுதல் தகவல்களுக்கு, 87782 01926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment