யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக்கல்லூரி மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 9 தனியார் யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களை இணைத்து வரும் 31-ம் தேதிக்குள்ளாக தேர்வுக்குழுவுக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என்றும் ஹோமியோபதித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment