Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 17, 2020

B.E., தரவரிசைப் பட்டியல் வெளியீடு தேதி மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு கல்வி நிறுவனங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்விற்கான ஆன்லைன் பதிவு கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் கலந்தாய்விற்காக பதிவு செய்தனர்.

பின்னர் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டதோடு, அதனைதொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து வந்தனர்.

இதனையடுத்து செப்டம்பர் 17ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கோரியதை அடுத்து தற்போது தரவரிசை பட்டியல் வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அக்டோபர் முதல் வாரத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment