JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, September 7, 2020

கல் அடைப்பிலிருந்து விடுபட

மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் தண்ணீரின் தன்மை இவற்றால் பலரும் கல் அடைப்பினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

ஒரு முறை கல் உருவான பிறகு எத்தனை சிகிச்சை முறைகள் மேற்கொண்டாலும் திரும்ப வருவதை தவிர்க்க முடியாது.

இதனைக் கட்டுப்படுத்த தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாக வெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வித்தியாசத்தை உணரலாம்.

மொந்தன் வாழைக்காயில் உள்ள துவர்ப்புச்சத்து கல் மறுபடியும் உருவாவதை தடுக்கிறது.

அப்படியே சாப்பிட முடியாதாவர்கள் மிக்சியில் சிறிது நீர் சேர்த்து அரைத்து ஜூஸாகவோ பருகலாம்.

இதில் உள்ள அபரிமிதமான சத்துக்கள் நுரையீரலையும் வலுப்படுத்தி சீராக இயங்க வைக்கிறது. கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது.

மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை சீராக இயங்க வைக்கிறது. அதிகத் தொப்பையை குறைத்து உடல் பருமனைக் கரைக்க உதவுகிறது.

சோம்பலாக இருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும் இந்த மொந்தன் வாழைக்காய்.

No comments:

Post a Comment