Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 4, 2020

டிச., வரை சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு


சென்னை: வரும் டிசம்பர் மாதம் வரையில் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என தமிழக அரசு  அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனால் அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அரசு அலுவலகங்களும் மூடப்பட்டதால் அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் செப்.,1 முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. 

வருகிற 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் டிசம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment