Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 7, 2020

நீரில் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்

பாதாமில் அதிக படியான வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கிறது. பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் பி, பொட்டாசியம், இரும்பு சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம், காப்பர் அதிகம் நிறைந்திருக்கிறது இந்த பாதாமில். இந்த பாதாமை அப்படியே சாப்பிடுவதை விட நீரில் ஊற வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

இரவு தூங்கும் பொழுது நான்கைந்து பாதாமை நீரில் ஊற வைத்து காலையில் அதன் தோலை மட்டும் உரித்து சாப்பிடும் பொழுது கிடைக்கும் நன்மைகள். தினமும் காலையில் நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிடும் பொழுது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவின் அளவு அதிகரிக்கும்.

இதன் மூலமாக செரிமானம் எளிதில் நடைபெறும் அதுமட்டுமல்லாமல் பாதாமை நீரில் ஊற வைக்கும் பொழுது பாதாமில் இருந்து லைஃப்பேட்ஸ் நொதி வெளியேறும் இது செரிமான மண்டலம் சீராக நடை பெறுவதற்கு முக்கியமான நொதி. நீரில் ஊற வைத்து சாப்பிடும் பொழுது செரிமானம் எளிதில் நடைபெறும் அதுமட்டுமில்லாமல் வயிற்றில் உள்ள தேவையில்லாத கழிவுகளை நீக்கப்பட்டு வயிறு சுத்தமாகும்.

வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது இந்த பாதாமில். முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருப்பதினால் இந்த பாதாமில் இயற்கையாகவே வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது

இந்த பாதாம் நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வர முகத்தில் பரு நீங்கும் முகப்பொலிவு அதிகரிக்கும் . முதுமையை தடுக்க கூடியது இந்த பாதாம்.

நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும். இது நம் உடலில் இருக்கக்கூடிய பிரீரடிகல்ஸ் எதிர்த்துப் போராடி வெளியேற்றும். இதன் மூலமாக முதுமை தோற்றம் தடுக்கப்படும்.

இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது இந்த பாதாம். பாதாமில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலில் கொழுப்புகள் உறிஞ்சுவதை தடுக்கிறது மற்றும் எதிர்க்க கூடிய வைட்டமின் ஈ மோனோசாச்சுரேட்டர் கொழுப்புகளை மெக்னீசியம், ஆன்டி ஆக்சிடென்ட் உடலின் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவி செய்யும்.

அதுமட்டுமில்லாமல் உடலில் உள்ள கொழுப்புகள் உறிஞ்சப்படுவதை தடுக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு சீராக இருக்கும் .அதோடு இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளும் வருவதும் தடுக்கப்படும்.

உடலில் ஆற்றல் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கக் கூடியது இந்த பாதாம். இதில் இருக்கக்கூடிய ரிபோஃப்ளோவின் மெக்னீசியம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவி செய்யும்.அது மட்டும் இல்லாமல் மூளையின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

இதன் மூலமாக ஞாபக சக்தி அதிகரிக்கும். உடல் எடையை குறைக்கக் கூடியது இந்த பாதாம். நீரில் ஊற வைத்த பாதாமில் அதிக படியான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அடங்கியிருக்கும்.

இதனை சாப்பிடும் பொழுது அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் இதில் இருக்கக்கூடிய மோனோஅன்சாச்சுரேட்டர் கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.

இதன் மூலமாக உடல் எடை விரைவில் குறையும். இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது இந்த பாதாம். நீரில் ஊற வைத்த பாதாமில் வளமான நார்ச்சத்து இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வர மிகவும் நல்லது. புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது இந்த பாதாம். இதில் இருக்கக் கூடிய வைட்டமின் பி17ன் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய முக்கியமான சத்துக்களில் ஒன்று.

இதன் மூலமாக நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வர புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது இந்த பாதாம். நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

தாய்பாலை அதிகரிக்க கூடியது இந்த பாதாம். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது பாதாம். தினமும் காலையில் நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிடும் பொழுது ரத்தத்தில் உள்ள ஆல்ஃபா அதிகரித்து இரத்த அழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்திருக்க உதவும்.

இதன் மூலமாக இரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வர உடலுக்கு மிகவும் நல்லது.

No comments:

Post a Comment