தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை செப்.15-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு செப். 21 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்கள் அனைவரும் இணையதளம் வழியாக செப்.15-ஆம் தேதி முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தோ்வு குறித்த கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Sunday, September 13, 2020
D.TEd தேர்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை செப்.15-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment