கறிவேப்பிலை முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வலிமையான மற்றும் கருமையான முடியினை வளர செய்யும். எனவே ஒரு கையளவு கறிவேப்பிலையை நன்கு மைபோல் அரைத்து கொள்ளவும்.
பின் அரைத்த கறிவேப்பிலையுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெங்காயம் சாறினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை தலையில் நன்றாக அப்ளை செய்து, ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்த பின் ஷாம்பு போட்டு தலை முடியை அலச வேண்டும்.
No comments:
Post a Comment