Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 2, 2020

ICT விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.

ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்குவதற்கு ஏதுவாக ஆசிரியர்களிடமிருந்து கருத்துருக்களை பெற்று அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் / தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆர்வமுடன் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து சிறப்பாக பணியாற்றும் தகுதியுடைய ஆசிரியர்களின் விவரத்தினை இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு படிவத்துடன் உரிய ஆதாரங்களை இணைத்து 4 பிரதிகள் இவ்வலுவலக அ 7 பிரிவில் 03.10.2020 மாலை 04.00 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேற்காண் விருது பெற தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லை எனில் " இன்மை ' ' அறிக்கை அனுப்பி வைக்க அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment