Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 2, 2020

குரூப்-4 பணியில் சேர்ந்த பிஎச்டி, எம்ஃபில் பட்டதாரிகள்

10-ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டகுரூப்-4 பணியில் 2 பிஎச்.டி. பட்டதாரிகள், 123 எம்.ஃபில். பட்டதாரிகள் சேர்ந்திருப்பது தகவல் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த 2018, பிப்.11-ல் நடத்தப்பட்டது. 10-ம்வகுப்பு தேர்ச்சியை அடிப்படை கல்வித் தகுதியாகக் கொண்ட இத்தேர்வை பிளஸ் 2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்.ஃபில்., பிஎச்.டி.பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.

இந்நிலையில், திருச்சியை சேர்ந்த பி.சுமித்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதி விவரங்களை டிஎன்பிஎஸ்சியிடம் கேட்டிருந்தார். அவருக்கு டிஎன்பிஎஸ்சி சார்பு செயலரும், தகவல் அதிகாரியுமான எஸ்.தர் அளித்துள்ளபதிலில், ''2018-ல் நடத்தப்பட்டகுரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற2 பிஎச்.டி. பட்டதாரிகள், 123 எம்.ஃபில். பட்டதாரிகள், 1,722முதுகலைபட்டதாரிகள் வெவ்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment