JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
வரும் 26 -ம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிறவிடுப்புகள் ஏற்றுக்கொள்ளபடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலை வாய்ப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.
தலைமைச்செயலாக ஊழியர்கள் 26 -ம் தேதி முழுமையான வருகை பதிவேடை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வருகையை உறுதிசெய்ய அனைத்து துறைகளுக்கும் தலைமை செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment