Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 11, 2020

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்.

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 படிக்கும், 5.45 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 215 கோடி ரூபாய் செலவில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி., துவக்கி வைத்தார்.

தமிழகத்தில், பெண் கல்வியை ஊக்குவிக்க, மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ - மாணவியர் அனைவருக்கும், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், 2001 - 2002ம் கல்வியாண்டில், ஜெயலலிதாவால் துவக்கப்பட்டது.கடந்த, 2005 - 06ம் கல்வியாண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், அனைத்து பிரிவு மாணவ - மாணவியருக்கும், இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

நடப்பு கல்வியாண்டில், 2.38 லட்சம் மாணவர்கள், 3.07 லட்சம் மாணவியர் என, மொத்தம், 5.45 லட்சம் மாணவ -- மாணவியருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டத்தை, நேற்று சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்து, ஒன்பது மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை வழங்கினார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், ராஜலட்சுமி, வளர்மதி, தலைமை செயலர் சண்முகம் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment