JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, March 3, 2021

மார்ச் 4 - நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

அய்யா வைகுண்டசுவாமி யின் அவதார விழாவை முன்னிட்டு வரும் 4-ம் தேதி (வியாழக்கிழமை) கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை திருவிழாவை ஒட்டி அரூர் கோட்டத்துக்கு நாளை 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 13ம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டு என்று அறிவித்துள்ளார்.




No comments:

Post a Comment