Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 7, 2021

ஸ்டிரைக் அறிவிப்பு.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!


வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.

மேலும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கிக் கூறும் வகையில் இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தார். இந்நிலையில், 13-ஆம் தேதி 2-வது சனிக்கிழமை 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment