JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, March 4, 2021

பகுதிநேர பயிற்றுநர்களது வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , ஈரோடு மாவட்டம் பகுதிநேரப்பயிற்றுநர்களது மாத ஊதியமானது ரூ .7700 / - லிருந்து ரூ .10,000 / - ஆக உயர்த்தி வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்களுக்கு ( மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டும் ) வழங்கப்பட்டுள்ளது. எனவே பிப்ரவரி 2021 மாதம் முதல் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கான மாத ஊதியத்தினை ரூ .10,000 / - ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு பிப்ரவரி 2021 ம் மாதத்தில் 04.02.2021 முதல் 12.02.2021 வரை உள்ள தேதிகளில் பணிக்கு வராத நாட்களை போராட்ட காலமாக கருதி No work No Pay அடிப்படையில் ஊதியத்தினை பிடித்தம் செய்து மாவட்டத்திட்ட வங்கிக்கணக்கில் செலுத்திட பள்ளிமேலாண்மைக்குழு | தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


No comments:

Post a Comment