முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு, ஜூன், 26, 27ல் நடத்தப்பட உள்ளது. இதற்கு, நேற்று துவங்குவதாக இருந்த, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக்குறிப்பு
முதுநிலை ஆசிரியர், கணினி பயிற்றுனர்தரநிலை~ ~ 1, உடற்கல்வி இயக்குனர் நிலை ~ ~1 ஆகிய பதவிகளுக்கு, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வின் ஆன்லைன் விண்ணப்பம் துவங்க, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், விண்ணப்ப தேதி தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
JOIN OUR SOCIAL MIDEAS
Subscribe to:
Post Comments (Atom)