JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, April 19, 2021

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 5ல் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, ஏப்., 16 முதல், செய்முறை தேர்வுகள் துவங்கிஉள்ளன. 

இதில், அறிவியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டன. 

இந்நிலையில், 'செய்முறை தேர்வு இல்லாத மாணவர்கள், இன்று முதல் பள்ளிக்கு வர வேண்டாம். நேரடியாக பொது தேர்வில் பங்கேற்றால் போதும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வு உள்ளவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் மட்டும், செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். செய்முறை தேர்வு முடிந்தவர்கள், பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறை நாட்களை, பொதுத்தேர்வுக்கு படிக்க பயன்படுத்த வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment