JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, June 29, 2021

தனியார் கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு..! விண்ணப்பிக்க நாளை கடைசி..!

தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழ்நிலையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், போன்ற களப பணியாளர்களின் பிள்ளைகள் எவரேனும் 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களுக்கு வேல்ஸ் கல்வி நிறுவனம் ஆனது இலவசமாக உயர்கல்வியினை வழங்க ஒரு திட்டத்தினை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

களப்பணியாளர்கள் பிள்ளைகள் 12 தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் உள்ள 50 மேற்பட்ட இளங்கலை பாடப்பிரிவுகளில் இதில் வேண்டுமானாலும் சேருவதற்கான இலவச அறிவிப்பினை வேல்ஸ் கட்டணமில்லா கல்வி என்ற பெயரில் அமல்படுத்தியது. கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டது போன்று இந்த ஆண்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த கல்வி உதவித்தொகைக்கான சிறப்பு தேர்வு தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜூலை 02 ஆம் தேதி முதல் 07 வரை நடைபெற உள்ளது.

தேர்வில் கலந்து கொள்பவர்கள் இந்த தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களுக்கு உகந்த 45 நிமிடங்களில் இந்த தேர்வினை எழுதலாம். தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் 10%, 25%, 50%, 75%, 100% சதவீத அடிப்படையில் டியூஷன் பீஸ் கட்டணமின்றி படிக்கலாம்.

தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு இந்த http://www.velsuniv.ac.in/ லிங்கில் தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment