Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 23, 2021

ஆன்லைன் வகுப்பு.. ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு !

கொரோனா பாதிப்பு, தொடர் ஊரடங்கால் தமிழகத்தில் நீண்ட காலமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய கல்வியாண்டு பிறந்துள்ளது. இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தாலும் முழுவதும் கட்டுக்குள் வரவில்லை. எனவே பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கல்வி தொலைக்காட்சி மூலம் அரசுப் பள்ளிப் மாணவர்கள் பாடம் படிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி இலவச பாடப் புத்தககங்கள் விநியோகம் செய்யும் பணிகள் அரசுப் பள்ளிகளில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த சூழலில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், கல்வி சேனலில் வகுப்புகளின் நேரம் குறித்த அட்டவணையை மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுப்பி வைக்க வேண்டும். ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள் புத்தகம் வாங்க வரும் போது, அவர்களுக்கு கல்வி சேனல் நிகழ்ச்சி அட்டவணை பிரதியை நேரில் வழங்க வேண்டும்.

மேலும் அனைத்து பள்ளிகளிலும் அட்டவணை விவரத்தை அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே வகுப்புகளை கவனிக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஸ்மார்ட்போன் மற்றும் கல்வி சேனல் பார்க்க வசதியில்லாத மாணவர்களின் விவரங்களை ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு வகுப்புகளிலும் வழங்கப்படும் வீட்டுப் பாடங்களை மாணவர்கள் செய்து அவற்றை ஸ்மார்ட் போனில் ஆசிரியர்களுக்கு அனுப்ப அறிவுறுத்த வேண்டும். பாடங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன் வழியாக தீர்த்து வைக்க வேண்டும். இதற்காக அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய மொபைல் எண் வழங்க வேண்டும்.

ஒருவேளை ஸ்மார்ட்போன் வசதியில்லை எனில், அந்த மாணவர்களின் பெற்றோர்களை நேரில் வரவழைத்து மாணவர்களின் அசைன்மென்ட்களை வாங்கி மதிப்பீடு செய்ய வேண்டும். அதேசமயம் யூ-டியூப் சேனல் வகுப்புகளை கவனிக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment