Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 30, 2021

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்போது?

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது சிறு சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் முழு எண்ணிக்கையில் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளதால் முழுத் தேர்வு நடத்த முடியவில்லை , விரைவில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இது தொடர்பாக பேசிய அவர், பள்ளி மாணவர்கள் நலன் கருதி அனைத்து மாணவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு மாதம் இருப்பதால் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment