Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 20, 2021

வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது - ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை!

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுக ளில் ஈடுபடுவோர் , வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவுக்கு தடைவிதிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது .

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 , கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வின்போது , தேர்வு மையங்களில் ஒழுங் கீனமான செயல்களில் ஈடு படுவோர் , சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் தேர் வர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் , அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் பங்கேற்கமுடி யாத வகையில் தடைவிதிக்கப்படும் .

மேலும் ஆயுட் காலம் முழுவதும் தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தற் போது எச்சரித்துள்ளது .

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் . உடற் கல்வி இயக்குநர் , கணினி ஆசிரியர் பணியிடங்கள் 2,207 உள்ளன . இவற்றில் நிரப்பப்படாமல் உள்ள 247 காலியிடங்களும் , புதிய பணியிடங்கள் 1,960 இடங்களும் அடங்கும் . இந்த பணிக்கான போட் டித் தேர்வில் பங்கேற்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தற்போது தொடங்கியுள்ளது .

இதற்கான எழுத்து தேர்வு நவம்பர் 13 , 14 , 15 ம் தேதிகளில் நடத்த திட்டமி டப்பட்டுள்ளது . அதன்படி விண்ணப்ப பதிவேற்றம் , கட்டணம் செலுத்துதல் , உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலமே நடக்கும் . இதையடுத்து , தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண் டிய விதிகளை ஆசிரி யர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . கணினி வழியில் தேர்வு எழுத ஒவ்வொ ருவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் .

- கர்ப்பிணிப் பெண் கள் , கடுமையான நோயால் பாதித்தவர்கள் அதற்கான சான்றுகளை சமர்ப்பித் தால் அவர்களுக்கு அரு கமை தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் . தேர்வு மையம் அமை யும் மாவட்டம் குறித்த விவரங்கள் 7 நாட்களுக்கு முன்னதாகவும் , தேர்வு மைய விவரம் தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக வும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் . ஹால்டிக்கெட்டுகள் இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும்.

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான சந்தேகம் , கணினி வழி தேர்வில் இடம் பெறும் கேள்விகள் தொடர்பாக விடைக்குறிப் பும் ஆட்சேபணைகளும் மின்னஞ்சல் மூலமாக மட் டுமே அனுப்ப வேண்டும் . கட்ஆப் மதிப்பெண் இருந்தும் விண்ணப்பித்த பணிக்கான உரிய கல்வித் தகுதி இல்லை என்றால் நிராகரிக்கப்படுவார் .

நிர்வாக காரணங் கள் , நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களுக் காக , தேர்வு வாரியம் நடத்தும் தேர்வை தள்ளி வைக்கவோ , ரத்து செய்யவோவாரியத்துக்கு முழு உரிமை உள்ளது .

தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர் வர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் விதமாக நடந்தால் கடு மையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்ப டும் . அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை எந்த தேர்வும் எழுத முடியாத வகையில் தடை விதிக்கப்ப டும் . மேலும் ஆயுட்கால தடை விதிக்கவும் முடியும் .

No comments:

Post a Comment