ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்கள் !!!.
இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு இல்லை என்கிற பத்திரிகை உண்மை இல்லை !!!.
ஓரிரு நாட்களில் கலந்தாய்வு/பதவி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது !!!.
பதவி உயர்வு /பணி நியமனம் மூலம் பணியாற்றும் அனைவரும் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் !!!.
முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவித்தப்படி கலந்தாய்வு நடத்த ஏதுவாக ஜாக்டோ- ஜியோ போராட்டம் மூலம் மாறுதல் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் பணியிடமும் காலிப்பணியிடமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் (பாதிக்கப் பட்டவர் பணியாற்றும் இடம்/பாதிக்கப்பட்டவரின் முந்தைய பணியிடம்) !!!.
பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாற்றம் கிடையாது என தகவல் !!!.
நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் !!!.