Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 29, 2022

TNPSC - குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு - நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும்; நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்தார்.
குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும்.

குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் – பாலச்சந்திரன்.

7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.

ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்.

தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 40%(60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே, அந்த தாள் திருத்தப்படும். மொத்தமாக 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் அந்த தேர்வர் தரவரிசைக்கு தகுதி பெறுவார்.

No comments:

Post a Comment