JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் முன்பாகவே டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது என்ற நிலை தொடர் கதையாகிவருகிறது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன வேதனையில் பணியாற்றுகின்றனர். மாணவர்களை எந்த விதத்திலும் தண்டிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரம் தரப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நமது அமைச்சர் :
மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை 2 ம் தாயாக விளங்கும் ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும் எனறும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அவன் பெற்ற தாய்க்கே அடங்குவதில்லை. அப்படி எப்படி ஆசிரியர்கள் அவனை இரண்டாம் தாயாக திருத்துவது???
No comments:
Post a Comment