Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 29, 2022

TNPSC 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு

நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

காலியிடங்கள்: 1089


பதவியின் பெயர் பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீடு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சம்பளம்
நில அளவர் நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணி 794 +4 (முன் கொணரப்பட்ட காலிப் பணியிடங்கள் ) ரூ.19500-71900/
வரைவாளர் நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணி 236 ரூ.19500-71900/
அளவர்/ உதவி வரைவாளர் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணி 55 ரூ.19500-71900/

முக்கியமான நாட்கள்:

அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 29.07.2022

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 24.08.2022

கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் : 06.11.2022

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

(அல்லது)

சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்



வயது வரம்பு:

நில அளவர்/வரைவாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2022 அன்று, 32 -க்கு கீழ் இருக்க வேண்டும் .

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியின் கீழுள்ள அளவர்/ உதவி வரைவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.07.2022 அன்று, 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்: ரூ. 100; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வுத் திட்டம்: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இடஒதுக்கீட்டு விதி பின்பற்றப்படும்.அதேபோன்று , 26.12.2017-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கென வகைப்படுத்தப்பட இனங்களுக்கு 4% இடஒதுக்கீடு இத்தேர்வுக்கு பொருந்தும்.

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment