JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, August 30, 2022

‘நிறைவேறாத கோரிக்கைகள் மீது முதல்வர் கவனத்தை ஈர்க்கவே ஜாக்டோ- ஜியோ மாநாடு'

ஜாக்டோ-ஜியோவின் மிக முக்கிய உறுப்பு சங்கமான தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் கள் பங்கேற்பது என மாநிலச் செயற்குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

வாழ்வாதாரக் கோரிக்கை களான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத் துதல், கடந்த 2 ஊதியக்குழுக்க ளில் மிகுந்த ஊதிய இழப்பைச் சந்தித்துள்ள இடைநிலை ஆசி ரியர்கள், முதுகலை ஆசிரியர் கள் ஆகியோரின் ஊதிய பாதிப் புக்களைச் சரி செய்தல், சத்து '*ணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர் கள், செவிலியர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோ ருக்கு முறையான காலமுறை

ஊதியம் வழங்குதல், காலிப்பணி யிடங்களை நிரப்புதல், அகவி லைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கும் தேதியிலிருந்து வழங் குதல், ஈட்டிய விடுப்பை ஒப்ப டைப்புச் செய்யும் உரிமையை மீண்டும் வழங்குதல், ஆசிரியர்க ளுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்கு தல், கல்வித்துறையில் ஆசிரியர்க ளின் கற்பித்தல் பணியைப் பாதிக் கும் வகையிலான இணையதளப் பதிவுகள் மேற்கொள்ளக் கூறுவ தைக் கைவிடுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் உள்ளன.

இக்கோரிக்கைகளின் மீது முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு நடைபெ றுகிறது.ஆசிரியர்,அரசு ஊழியர் கள் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் நியாயமான கோரிக்கை களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளது என்றார்.

மாநில துணைத்தலைவர் மா. ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment