Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 9, 2022

உடலின் நச்சுக்களை வெளியேற்ற 'இதை' செய்தால் போதும்!

காலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று தண்ணீர்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் அதன் குறைபாடு அனைத்து வகையான நோய்களையும் ஏற்படுத்தும். நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள குறைந்த அளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடலில் நீர் சத்து இருப்பது மிகவும் முக்கியம். நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். தண்ணீர் பற்றாக்குறையால் தலைவலி, மலச்சிக்கல், தோல் வறட்சி, மூட்டு வலி, அஜீரணம், குறைந்த ரத்த அழுத்தம், உடல் பருமன் பிரச்னை, மார்பகப் புற்றுநோய் போன்ற பல பிரச்னைகள் வரலாம். நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், ஏன் ஒவ்வொரு முறையும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உடலில் உள்ள நீரின் அளவு 50-60 சதவீதம். நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலின்நச்சுக்களை வெளியேற்றுவதுமுதல், உடல் எடையை குறைப்பது முதல் எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை கொடுக்கிறது.

1. செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம், அதாவது மெட்டபாலிஸம் அதிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் செரிமான அமைப்பு சிறப்பாக இருக்கும், மேலும் நீங்கள் மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

2. எடையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

தண்ணீர் குடிப்பதால் பசி குறைகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். இதனால், செரிமான அமைப்பை மேம்படுத்தி எடையைக் குறைக்க உதவுகிறது.

3. ஆற்றலை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்

நீங்கள் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால், தண்ணீர்குடிப்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் நீரிழப்பு காரணமாக, சோர்வு ஏற்படுகிறது. சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலுக்கும் ஆற்றல் கிடைக்கும்.

4. மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்

நீங்கள் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால், மூளை திசுக்களில் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. நீரிழப்பு காரணமாக, உடலுடன் சேர்ந்து, மூளையும் மன அழுத்தத்தை உணர்கிறது. எனவே, அவ்வப்போது தண்ணீர் குடிப்பதன் மூலம், டென்ஷனைக் குறைக்கலாம்.

5. கூந்தலின் அழகை அதிகரிக்கும்

தண்ணீர் பற்றாக்குறையால், முடி மெல்லியதாகவும், உடையக்கூடியதாகவும் மாறத் தொடங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தண்ணீர் பற்றாக்குறை கூட முடியின் வறட்சி மற்றும் உயிரற்ற தன்மைக்கு காரணம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது முடியின் வறட்சியைப் போக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

காலையிலும் மாலையிலும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

காலையில் எழுந்தவுடன் உடனடியாக குறைந்தது 3 டம்ளர் குடிக்க வேண்டும். நீங்கள் தினமும் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். தண்ணீர் குடித்த 45 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ள வேண்டும். அதற்கு முன் எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

No comments:

Post a Comment