Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 24, 2022

ரயில்வேயில் வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 
இந்தியன் ரயில்வேவின் தென் மேற்கு ரயில்வேவில் சாரணர்,சாரணியர் கோட்டாவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென் மேற்கு ரயில்வே மற்றும் ரயில் சக்கர தொழிற்சாலையில் உள்ள நிலை 1 மற்றும் நிலை 2 இல் பணியாற்ற விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளின் விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.


பணியின் விவரங்கள்:வயது வரம்பு:நிலை 2 விண்ணப்பதார்கள் 18 வயதில் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும். நிலை 1 விண்ணப்பதார்கள் 18 வயதில் இருந்து 33 வயது வரை இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி



சாரணர், சாரணியர் தகுதி: சாரணர் மற்றும் சாரணியர் குழுவில் 5 வருடம் இருந்து பணி செய்திருக்க வேண்டும். மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.



விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் ரயில்வே இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை கையில் பூர்த்தி செய்து அதனை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். தேர்வு கட்டணமாக SC/ST/Ex-Servicemen/PwBDs/EBC ரூ.250/- மற்றும் இதர பிரிவினர் ரூ.500/- ஐஓபி முறையில் Asst. Personnel Officer/Rectt., South Western Railway, Hubli என்ற பெயரில் செலுத்த வேண்டும்.



நிலை 2 பணிக்கு விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:The Assistant Personnel Officer/Rectt., Railway Recruitment Cell, South Western Railway, 2nd Floor, Old GM's Office Building, Club Road, Keshwapur, Hubballi580023.நிலை 1 பணிக்கு விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:The Assistant Personnel Officer/Rectt., Railway Recruitment Cell, South Western Railway, 2nd Floor, Old GM's Office Building, Club Road, Keshwapur, Hubballi580023.



விண்ணப்பிக்கக் கடைசி நாள் :இரண்டு நிலை பணிகளுக்கு விண்ணப்பங்கள் 19.12.2022 மாலை 05.45 மணிக்குள் தபால் மூலம் வந்து சேர வேண்டும்.

No comments:

Post a Comment