Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 30, 2022

கும்பம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

லாப வீடான தனுசில் சூரியனும் புதனும் ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சாரம் செய்கிறர்கள். இதனால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். உறவுகள் தேடிவருவர். அவர்களிடையே உங்கள் பெயர் ஓங்கியிருக்கும்.

தன்னை நாடி வருபவர்களுக்குத் தயங்காமல் உதவும் தயாள குணம் கொண்ட கும்பராசி அன்பர்களே... விவாதம் எதுவாக இருந்தாலும் தன் வார்த்தையே இறுதியானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு வரும் 2023-ம் ஆண்டு எப்படி அமையும் என்று பார்ப்போம்.

ராசிக்கு 3-ம் வீடான மேஷத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும்போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே பேச்சில் சாமர்த்தியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.

லாப வீடான தனுசில் சூரியனும் புதனும் ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சாரம் செய்கிறர்கள். இதனால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். உறவுகள் தேடிவருவர். அவர்களிடையே உங்கள் பெயர் ஓங்கியிருக்கும். வெளிவட்டாரத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு கூடும்.

2 மற்றும் 3 ம் வீட்டில் குருபகவான்

22.4.2023 வரை குருபகவான் தங்களின் தன குடும்ப வாக்குஸ்தானமான மீனத்தில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் இருந்தாலும் அது நல்ல செலவாகவே இருக்கும். உறவினர்கள் தேடிவந்து உறவு பாராட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை இல்லாமல் ஏங்கும் தம்பதிகளுக்குப் பிள்ளைச் செல்வம் கிடைக்கும். புது வீடு மனை வாங்கும் கனவு மெய்ப்படும். அதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். புகழ்பெற்ற திருக்கோயில்களுக்கு யாத்திரை சென்று வருவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இருந்த பிரச்னைகள் விலகும். வீடு மனை விற்பது சாதகமாகும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். வழக்கில் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக வரும்.

23.4.2023 முதல் குருபகவான் பெயர்ச்சி அடைந்து 3 ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். என்றாலும் பணிச்சுமை இருந்த வண்னம் இருக்கும். புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் வாய்க்கும். அடுத்தவர்களை அளவுக்கு மீறி நம்பவேண்டாம். தேவையற்ற ஏமாற்றங்கள் ஏற்படலாம். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் வரிசை கட்டும். சகோதரர்களிடையே இருந்த வருத்தங்கள் தீரும். இந்தக் காலகட்டத்தில் புதிய நட்புகளை ஏற்கும் முன்பு நன்கு ஆலோசித்துச் செய்வது நல்லது.

ராகு - கேது தரும் பலன்கள்

8.10.2023 வரை உங்கள் ராசிக்கு 9 - ம் வீடான துலாமில் கேதுபகவான் சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தில் தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். அவருடன் தேவையற்ற விவாதங்களைத் தடுப்பது நல்லது. சொத்துப் பிரச்னைகளும் தீர்வு காணாமல் இழுபறியாகவே இருக்கும். ஆனால் 3-ம் வீடான மேஷத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் எந்தப் பிரச்னையையும் சந்திக்கும் துணிச்சல் பிறக்கும். பக்குவமாக முடிவெடுப்பீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் வாய்க்கும்.

9.10.2023-ம் தேதிக்குப் பின் 2-ம் வீட்டில் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால் அனைத்திலும் எச்சரிக்கை தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பணிச்சுமை காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். வாக்குஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வாகனப் பராமரிப்பில் அக்கறை செலுத்துங்கள். பயணங்களில் கவனம் தேவை.
சனிபகவான்

சனி பகவான் சஞ்சாரம் எப்படி?

விரையச் சனியாக 12 ம் வீட்டில் சஞ்சாரம் செய்துவரும் சனிபகவானால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் வாட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சித்தர்கள் மகான்களின் தரிசனம் மனதுக்கு ஆறுதல் தரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்குள்ளேயே சஞ்சாரம் செய்து ஜன்ம சனியாகப் பலன்தர இருக்கிறார். இதனால் இக்காலகட்டத்தில் வீண் விரையம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும். என்றாலும் உண்மையாக உழைப்பவர்களுக்கு அதற்குரிய பலம் கிடைக்கும்.

வியாபாரம்: லாபம் அதிகரிக்கும். என்றாலும் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பெரிய கடன்களை வாங்க வேண்டாம். அதேபோன்று யாருக்கும் கடன் தரவும் வேண்டாம். வேலையாட்களால் லாபம் குறையும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். அரிசி, பூ, எலக்ட்ரிக்கல், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.

உத்தியோகம்: அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். கூடும். ஆனால் மே மாதம் முதல் பணிச்சுமை கூடும். மற்றவர்கள் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் இருக்கும் என்றாலும் மனநிறைவு உண்டாகும். பதவி உயர்வு, சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும்.

மொத்தத்தில் 2023-ம் ஆண்டு முன்னேற்றத்தை தரும். ஆண்டின் பிற்பகுதியில் அலைச்சலும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

No comments:

Post a Comment