Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 11, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.01.2023

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண்: 737

குறள்:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

பொருள்:
ஊற்றும் மழையும் ஆகிய இருவகை நீர்வளமும்  தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்

பழமொழி :

Don't kick the ladder by which you climb up.
ஏற உதவிய ஏணியை உதைக்காதே

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்

பொன்மொழி :

மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.1. மூக்கு கொம்பன் என்று எந்த விலங்கை அழைப்பர்? காண்டாமிருகம். 2. ராணுவ தினம் எப்போது? ஜனவரி 15.

பொது அறிவு :

1. மூக்கு கொம்பன் என்று எந்த விலங்கை அழைப்பர்? 

 காண்டாமிருகம்

 2. ராணுவ தினம் எப்போது? 

 ஜனவரி 15.

English words & meanings :

heal - to cure the sickness. verb. குணப்படுத்து. வினைச் சொல். heel -back of the feet. noun. குதிங்கால். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

ஆளி விதை மற்றும் பால் கலவையானது குடலுக்கு நன்மை பயக்கும். ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. நார்ச்சத்து குடல் உணவை ஜீரணிக்க உதவுகிறது. நார்ச்சத்தை உட்கொள்வதன் மூலம், உணவை ஜீரணிக்க குடல்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. இது செரிமானத்தை மேம்படுத்தும். செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் நீங்குவதற்கு உதவுகிறது.


ஜனவரி 11


திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுநாள்

திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran, அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனவரி 11 இல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்

நீதிக்கதை

வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு யாராவது காப்பாற்றுங்கள் என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு நான் கீழே வந்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.

இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்? என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன் என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன் என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

இன்றைய செய்திகள்

11.01.2023

* கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* "2023ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் காப்புறுதிக் கட்டணத் தொகை ரூ.1200 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* தமிழக கடற்கரையோரங்களில் கிடைக்கும் கனிமங்களை சந்தைப்படுத்த ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

* 2021-ம் ஆண்டு அதிக சாலை விபத்துகள் ஏற்பட்ட பெருநகரங்களின் பட்டியிலில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. மேலும், சாலை விபத்துகளில் அதிகமானோர் மரணம் அடைந்த பட்டியலில் சென்னையில் 2-வது இடத்தில் உள்ளது.

* திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் 350 அடி வரை உள்ளே புகுந்த கடல்நீர் - நிபுணர்கள் ஆய்வு.

* ஜோஷிமத் நகரில் ஏற்பட்ட நிலவெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கஷ்டப்பட்டு கட்டிய தங்கள் வீட்டை எண்ணி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

* உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியுள்ளார்.

* பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

* இந்தோனேசியாவின் தனிம்பார் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

* மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது.

* போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்டோ மார்டினெஸ் நியமனம்.

 * ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு.

Today's Headlines

* The Madras High Court has ordered the Dindigul District Collector to seal shops selling plastic bags and water bottles in Kodaikanal.

* "A check of Rs. 1200 crore has been issued to the United India Insurance Company for the insurance premium amount of the Chief Minister's Comprehensive Medical Insurance Scheme for the year 2023," said the Minister of Health and Welfare.

 * Agreement to market minerals which is found along the coastal regions of TN: Signed

 * Chennai tops the list of cities with the highest number of road accidents in 2021.  Also, Chennai ranks 2nd in the list of most road accident deaths.

*  Seawater intrusion up to 350 feet in Sriharikota area of ​​Tirupati district - experts study.

* As the government has taken steps to demolish the buildings affected by the earthquack in Joshimath, people are shedding tears thinking about their hard-built houses.

* Athar Poonawala, Chief Executive Officer of Serum Company, has said that Corona is under control in India better than other countries in the world.

 * Pakistan is in a severe economic crisis and people are suffering due to the steep rise in the prices of essential commodities.

 * A magnitude 7.7 richter earthquake has been reported in Tanimbar, Indonesia.

 * The Malaysian Open Badminton Series started yesterday in Kuala Lumpur.

*  Roberto Martinez appointed as new coach of Portugal football team.

 * England's Harry Brook selected as the Best cricketer  of the Month for December by ICC
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment