Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 25, 2023

600 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதற்கான தேவை குறித்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


2008-2009-2010 மற்றும் 2010 2011 ஆம் கல்வியாண்டுகளில் தரமுயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி மற்றும் / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து மகளிரை பிரித்து துவக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு 1512 தற்காலிக பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது.

இப்பணியிடங்களில் 600 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ள நிலையில் இப்பணியிடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாகயுள்ள பணியிடங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் தற்காலிக பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதற்கான தேவையை பரிசீலனை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அது குறித்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

No comments:

Post a Comment