தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குனர் பதவிக்கான நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியீடு.
11 பணியிடங்களுக்கான தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அன்று கணினி வழித் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 1,444 பேர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: மதவாதத்திற்கு மட்டுமே எதிரானவர்கள் மத்திற்கு அல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
நேர்முகத் தேர்வு:
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) பதவிக்கு வருகிற 19 ஆம் தேதி நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 41 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment