Sunday, January 8, 2023

Jacto Geo Strike: தமிழ்நாடு முழுவதும் பிப்.12-ந் தேதி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 12- ஆம் தேதி ஆர்பார்ட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், மார்ச் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், மார்ச் 24ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. 

 தமிழ்நாடு நிதியமைச்சர் தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாகாவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலியாக உள்ள பணியிடங்கலை நிரப்ப வேண்டும உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment