Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Saturday, February 18, 2023

அறுபது வயசானாலும் கழுகு மாதிரி கூர்மையான பார்வையைப் பெற அசத்தலான டிப்ஸ்!!!

Add This Number In Your Whatsapp Groups -6379884356




நமது நவீன வாழ்க்கை முறையின் காரணமாக, கணினி, டேப்லெட், டிவி அல்லது செல்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறோம்.

இதன் விளைவாக கண்புரை, கிளௌகோமா, உலர் கண்கள், மோசமான இரவு பார்வை மற்றும் பிற கண் கோளாறுகள் உண்டாகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் கடுமையான கண் நோய்களைத் தவிர்க்கலாம்.

நன்கு சமநிலையான மற்றும் ஆரோக்கியமான உணவு கண் ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியம் மற்றும் கண் நோய்த்தொற்றுகளைப் பெறுவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவும். அந்த வகையில் உங்கள் பார்வையை மேம்படுத்த உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

●ஆரஞ்சு சாறு
ஆரஞ்சு சாறு உங்கள் கண்களை மேம்படுத்த பெரிதும் உதவும். ஆரஞ்சு வைட்டமின் சி இன் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். இது கண்புரை உருவாவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஃபோலேட் என்ற கருவின் பார்வை வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான பி வைட்டமினும், ஆரஞ்சு சாற்றில் உள்ளது.

●கேரட், பீட்ரூட் மற்றும் ஆப்பிள் ஜூஸ்

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் இரவு பார்வையை கூர்மையாகவும், பொதுவாக உங்கள் கண்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. மறுபுறம், பீட்ரூட்டில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளது. இது மாகுலர் மற்றும் விழித்திரையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆப்பிளில் நிறைய பயோஃப்ளவனாய்டுகள் உள்ளன. அவை பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், மருத்துவர்களை சந்திக்க நேரிடும் சூழ்நிலைகளை விலக்கி வைப்பதாகவும் நம்பப்படுகிறது.

●தக்காளி சாறு

கண்களுக்குத் தேவையான சத்துக்களில் பெரும்பாலானவை தக்காளிச் சாற்றில் உள்ளன. தக்காளியில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் பார்வையை மேம்படுத்த உதவியாக இருக்கும். வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கும் அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றமான லைகோபீனும் தக்காளியில் உள்ளது.

●தேங்காய் தண்ணீர்

தேங்காய் நீரில் வைட்டமின் சி மற்றும் பிற தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது கண்களின் பாதுகாப்பு திசுக்களை மேம்படுத்த உதவுகிறது. தேங்காய் நீரை தினமும் உட்கொள்வது கிளௌகோமா என்ற கண் நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க உதவும்.





No comments:

Post a Comment

Popular Feed