Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 2, 2023

சப்ஜா இலையை நீரில் கொதிக்க வச்சி குடிச்சா எந்த நோயை வச்சி செய்யும் தெரியுமா ?

திருநீற்று பச்சிலை விதையை சப்ஜா விதை என்று அழைப்பார்கள் .இது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது

சிறிதளவு சப்ஜா விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை போன்ற நோய்கள் நம்மை விட்டு ஓடி விடும் .

சப்ஜா விதையை செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் போன்ற நோய்கள் நம்மை விட்டு ஓடி விடும் .மேலும் இந்த விதை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்


1.சப்ஜா இலை உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீரை வெளியேற்றும் .அந்த நச்சு நீர் வியர்வையாக வெளியேற்றிவிடும்.

2.சளி , சைனஸ் தொந்திரவால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் இந்த இலைகளை கைபிடி அளவு எடுத்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.

3.அனைத்துவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது. படர்தாமரை தொந்தரவிற்க்கு இந்த இலைகளை அரைத்து சருமத்தில் பூசி வரலாம்.

4.மேலும் குழந்தைகளை குளிப்பாட்ட இந்த இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளிக்க வைத்து ஆரோக்கியம் பெறலாம் .

5.இந்த இலைகளின் சாறை உடலில் பூசிக்கொண்டால், எந்த பூச்சிகளும் நம்மை நெருங்காது.

6.விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சப்ஜா சாறு தேய்த்து வரலாம்

No comments:

Post a Comment