Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 8, 2023

TN TET தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – TNOU பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Add This Number In Your Whatsapp Groups -6379884356
தமிழகத்தில் திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வும், ஆசிரியர் தகுதி தேர்வும் (TET) ஒரே நாளில் நடைபெற உள்ளது. அதனால் TET தேர்வு எழுதவுள்ளவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TET தேர்வு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் டெட் தேர்வின் வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி முதல் கட்ட TET paper – 1 தேர்வு 2022 அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET paper – 2 கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற உள்ளது. இந்த பல்கலைக்கழக தேர்வு நாளில் டெட் தேர்வும் நடைபெற உள்ளதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் TET தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளதால் அவர்கள் ஒரே நாளில் இரு தேர்வையும் எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அம்மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு 19.03.2023 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. TET எழுதவுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்றுடன் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சைதாப்பேட்டை என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed