Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram

Monday, March 6, 2023

பிளஸ் 2 பொது தேர்வு அரசு புதிய உத்தரவு

Add This Number In Your Whatsapp Groups -6379884356
பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், மூத்த முதுநிலை ஆசிரியர்களுக்கு, முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் பாடத் திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இம்மாதம், 13, 14ம் தேதிகளில் பொது தேர்வுகள் துவங்குகின்றன.

இந்நிலையில், தேர்வு மையங்களில், தலைமை ஆசிரியர்களை மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.

இதனால், பல மாவட் டங்களில், முதன்மை கண்காணிப்பாளர் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

எனவே, அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை மட்டுமின்றி, பணி மூப்பில் முன்னிலையில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோரையும் முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கலாம்.

இவ்வாறு, அரசு தேர்வுத்துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed