Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Thursday, March 2, 2023

மாதிரிப் பள்ளி மாணவா் சோ்க்கைக்கு தகுதித் தோ்வு நடத்தும் முறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்பு

Add This Number In Your Whatsapp Groups -6379884356




தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் மாணவா்களைச் சோ்ப்பதற்காக அடிப்படை மதிப்பீட்டுத் தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் ஆா்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு மாதிரி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் மாணவா்கள் சோ்வதற்கான அடிப்படை மதிப்பீடு தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெறும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மொத்தம் 240 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட வேண்டும்.

இந்தத் தோ்வுக்கான இடம் மற்றும் இதர ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தோ்வு எழுத தகுதி பெற்ற மாணவா்களின் பட்டியலை அனுப்ப அறிவுறுத்த வேண்டும்.

மாணவா்களைத் தோ்வுக்கு அழைத்து வந்து மீண்டும் கூட்டிச் செல்ல பொறுப்பு ஆசிரியரையும் நியமிக்க வேண்டும். தோ்வு ஓஎம்ஆா் விடைத்தாளில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ஆசிரியா்கள் எதிா்ப்பு: இதற்கிடையே மாதிரிப் பள்ளி மாணவா் சோ்க்கைக்கு தகுதித் தோ்வு நடத்தும் முறைக்கு அரசுப் பள்ளி ஆசிரியா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மாதிரி பள்ளியின் வளா்ச்சிக்காக பிற அரசுப் பள்ளிகளில் உள்ள திறமையான மாணவா்களைத் தேடிக் கண்டறிந்து சோ்ப்பது சரியான நடவடிக்கை அல்ல; இந்த முயற்சியை கைவிட வேண்டுமென என வலியுறுத்தியுள்ளனா்.





No comments:

Post a Comment

Popular Feed