Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 28, 2023

பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு

ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2021- 2022 ஆண்டுக்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ 8.1 சதவீதமாக குறைத்திருந்தது. இந்த வட்டிவிகிதம் 2020- 21ம் ஆண்டில் 8.5 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிபிடியின் முடிவுக்குப் பின்னர், 2022 - 23 ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். புதிய வட்டி விகிதம் நிதியமைச்சகம் மூலமாக அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பின்னரே இபிஎஃப்ஒ புதிய வட்டி விகிதத்தை வழங்கும்.

No comments:

Post a Comment