Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 20, 2023

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி



புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் வரும் 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரூ 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2018-19ஆம் ஆண்டு முதல் ரூ.2,000 நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் வங்கிகளில் செலுத்தப்படும் ரூ2,000 நோட்டுகளை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் எனவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment