
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த வலைதளங்களில் ரிசல்ட்டை தெரிந்துகொள்ள தேடுவதால் இந்த இணையதளங்கள் பிஸியாக இருக்கும். இதனால் உங்களுக்கு ரிசல்ட் வர தாமதமாகலாம் என்று வருந்த வேண்டாம்.
மற்றோரு ஆப்ஷனாக பள்ளியில் கொடுக்கப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகளை அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் யாரும் பதற்றம் கொள்ள தேவையில்லை. வீட்டில் செல்போன் இல்லை, ஆன்லைன் வசதியில்லை என்றால் மற்றோரு ஆப்ஷனாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment