Subscribe Us

Saturday, May 13, 2023

மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற புதிய திட்டத்தை அறிமுகம் செய்த சி.பி.எஸ்.இ...!!


மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணைத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பில் 2 பாடங்களிலும், 12ம் வகுப்பில் ஒரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வு எழுதலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்புத் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின. இந்த ஆண்டு முதல் முறையாக, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை வெளியிடாமல் தவிர்த்துவிட்டது சி.பி.எஸ்.இ. நிர்வாகம். அதேவேளையில், நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை அளிக்கவும் முடிவு செய்துள்ளது

No comments:

Post a Comment

Popular Feed