![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_ae5ZGQ8juFFyyKDwSbgQsE0ZbeMUsWVPJoyafM2OXBJ-Q3iCriWgMYcDUkn_XNIx3RnL45N7W3-1knBa5KVM0Q6XZACcXv3sQxyezpKoYk3Hr0IWcld89MqT8ezO4eRw9tVpshb8_I_cVf0YphrGDoEsz1_czKdAno8O2OJJstlAMslHwYD5dQtrT4hB/w623-h757/sdf.jpg)
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின் படி , கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அரசு அறிவித்து , அந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 15.07.2023 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவித்து , அந்நாளில் காமராசர் அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் , பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment