பொதுவாக நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இருநோய்களில் மிகமுக்கியமானவை சர்க்கரை நோயும் ரத்த கொதிப்பு நோயும். இந்த இரு நோய்கள் வராமல் நம்மை காப்பது சிறு பயறு . இந்த சிறு பயரால் நம் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. சிறு பயிறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக மெதுவாகவே அதிகரிக்கும்.
2. இந்த சிறுபயறு இரத்தத்தின் சர்க்கரையை அதிகரிக்கும் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) 38 என்றஅளவு கொண்டது.
3. இந்த சிறுபயரில் அதிகமாக காணப்படும் நார்ச்சத்து, மெக்னீசியம், புரதம் ஆகியவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவைகுறைக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும் .
4. பொதுவாக முதுமையில் பெரும்பான்மையோரை பாதிப்பது உயர்இரத்த அழுத்தம் என்னும் இரத்தக் கொதிப்பாகும்.
5. இந்த ரத்தகொதிப்பு நமக்கு இதய நோய் வரக்கூடிய ஆபத்தையும் உருவாக்குகிறது.
6. சிறு பயிறு சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் குறைகிறது.
7. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அடங்கிய உணவான சிறுபயிறு, உயர்இரத்த அழுத்தம் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கிறது..
8. இந்த சிறுபயரில் அதிக வைட்டமின்உள்ளது.
9. இந்த சிறுபயறு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும்.
10. சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது சிறுபயறு.
11.உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், இந்த பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment