Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 18, 2024

நவோதயா பள்ளிகளில் பல்துறை காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு - 10ஆம் வகுப்பு to டிகிரி வரை முடிதவர்கள் விண்ணபிக்கலாம்

மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1,377 Non Teaching பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.42 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidhyalaya Samithi or NVS) பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:


* நர்ஸ் பணிக்கு 121 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்சி நர்சிங் முடித்து 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

* அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் டிகிரி முடித்து 23 வயது முதல் 33 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.35,400 - ரூ.1.12 லட்சம் வரை வழங்கப்படும்.

* ஆடிட் அசிஸ்டென்ட் பிரிவில் 12 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. பிகாம் முடித்து 18 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 3 ஆண்டு அக்கவுண்ட் பிரிவில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை வழங்கப்படும்.

* ஜுனியர் டிரான்ஸ்லேஷன் ஆபிசர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஹிந்தி, ஆங்கிலத்தில் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் அல்லது மாஸ்டர் டிகிரியில் ஹிந்தி, ஆங்கிலத்தை பாடமாக படித்து 32 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக மாதசம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை வழங்கப்படும்.

* லீகல் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சட்டப்படிப்பை முடித்து வழக்குகளில் வாதாடும் அனுபவம் கொண்ட 23 வயது முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை வழங்கப்படும்.

* ஸ்டெனோகிராபர் பணிக்கு 23 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12ம் வகுப்பு முடித்து ஆங்கிலம், ஹிந்தியில் டைப்பிங் தெரிந்து 18 முதல் 27 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்பட உள்ளது.

* கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஐடி முடித்து 18 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்பட உள்ளது.

* கேட்டரிங் சூப்பர்வைசர் பணிக்கு 78 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை பட்டப்படிப்பை ஹோட்டல் மேனேஜ்மென்ட் அல்லது 10 ஆண்டு ராணுவ துறையில் கேட்டரிங் பிரிவில் பணியாற்றிய சான்று பெற்ற முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்பட உள்ளது.

* ஜுனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் பணிக்கு 381 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12ம் வகுப்பு முடித்து நிமிடத்துக்கு ஆங்கிலத்தில் 30 வார்த்தைகள் ஹிந்தியில் நிமிடத்துக்கு 25 வார்த்தைகளும் டைப் செய்யும் திறமை கொண்டிருப்பவர்கள் விண்பணப்ம் செய்யலாம். இல்லாவிட்டால் 12ம் வகுப்பு முடித்து செக்ரட்டரியல் பிராக்டிசஸ் மற்றும் ஆபிஸ் மேனஜ்மென்ட் முடித்து 27 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும்.

* எலக்ட்ரிஷியன் அண்ட் பிளம்பர் பணிக்கு 128 தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு முடித்து ஐடிஐடியில் எலக்ட்ரிஷியன், வயர்மேன் படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்ட 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும்.

* லேப் அட்டென்டன்ட் பணிக்கு 161 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு முடித்து டிப்ளமோ லேபோராட்டரி டெக்னிக் அல்லது 12ம் வகுப்பில் Science Stream பாடப்பிரிவுகளுடன் படித்து முடித்து 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.

* மெஸ் ஹெல்பர் பணிக்கு 442 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 வகுப்பு முடித்த 30 வயதுக்கு உள்ளானவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.

* மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 19 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 வகுப்பு முடித்த 30 வயதுக்கு உள்ளானவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.

* இப்படி மொத்தம் 13 பிரிவுகளில் 1,377 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு என்பது அளிக்கப்பட உள்ளது. அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.

* தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Navodaya.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment