![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlq-NkRWG5D4oQ6c8kdr28XnTF_OwPT2rhKr5lCHxH-oKWYIWbkY-mQbBCaSrxf1o2VJJY7vQ7pSaokUJV3PxUg1DG42CZ0ydK2tR27H0o_0wy_TyprN9FUaHCpJDN53TlX6T5QtLqZk6Ewc6veEris_URtmmXrFiR25MuA1nY7g_C87GGf4hW-GWyjDNJ/s320/IMG_20240426_173824.jpg)
பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 03.05.2024 ( வெள்ளிக் கிழமை ) - பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
அனைத்து வகை பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது மாதந்தோறும் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நடத்தப்பட்டு வருகிறது . இக்கல்வியாண்டில் ( 2023-2024 ) பொதுத்தேர்வு சார்ந்து 10 , 11 , 12 - ஆம் வகுப்பு மாணவர்களில் தேர்வுக்கு வாராதவர்கள் எவரென கண்டறிவதற்கும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவ , மாணவியர்கள் துணைத் தேர்வு எழுத ஊக்கப்படுத்துவதற்கும் , தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி குறித்தான வழிகாட்டுதல்களை பெறுவது குறித்தும் , விழிப்புணர்வு வழங்குவது சார்ந்தும் , பள்ளித் தேவைகளுக்கான நன்கொடைகள் முறைப்படுத்துதல் சார்ந்தும் கலந்துரையாட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டமானது 03.05.2024 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை அவசியம் நடத்த அறிவுறுத்தப்படுகிறது.
சிறப்புப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டப் பொருள் நிரல்கள்
SMC Special Meeting on 03.05.2024 👇
No comments:
Post a Comment